ஆளுமை:சிவசுப்பிரமணியம், நல்லதம்பி
Name | சிவசுப்பிரமணியம் |
Pages | நல்லதம்பி |
Birth | 1939.07.25 |
Place | அரியாலை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசுப்பிரமணியம், நல்லதம்பி (1939.07.25 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நல்லதம்பி. இவர் ஆரம்பக் கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றார். இவர் ச. செல்லத்துரையிடம் கலை பற்றிய அறிவைப் பெற்று 1949 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.
இவர் சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன், சந்திரமதி, நாரதர், நல்லதங்காள், பாஞ்சாலி, மாதவி உட்படப் பல நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் பருத்தித்துறை, வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை போன்ற பாடசாலைகளிலும் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன.
இவருடைய கலைப்பணிக்காக வடமராட்சி வடக்குப் பிரதேசக் கலாச்சாரப் பேரவை இவரைப் பாராட்டிக் கௌரவித்ததோடு, சிவசாயி கலாமன்றத்தினாலும் செல்லையா மெட்றாஸ்மயிலாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 161-162