ஆளுமை:ஜெயகுமரன், அருமைநாயகம்
From நூலகம்
| Name | ஜெயகுமரன் |
| Pages | அருமைநாயகம் |
| Birth | |
| Place | சுன்னாகம், யாழ்ப்பாணம் |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஜெயகுமரன், அருமைநாயகம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலயத்திலும், உயர்க்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் கற்றார். தற்போது ஆசிரியராக தொழில் புரிகின்றார். படிக்கும் காலத்திலேயே எழுதுவதில் ஆர்வம் காட்டிய இவர் 1987ஆம் ஆண்டு எழுத்துத் துறைக்குள் பிரவேசித்தார். கவிதை, சிறுகதை, நாடகம் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.
இவரின் ஆக்கங்கள் உதயன் பத்திரிகையிலும் யாழ் இந்து சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன. மருத்துவப் படிப்பிற்காக ரஷ்யா சென்ற இவர் இதயஒளி என்னும் பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருந்தார். பிரான்சில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
Resources
- நூலக எண்: 4076 பக்கங்கள் 37