ஆளுமை:திருநாவுக்கரசு, தம்பிராசா (நாவேந்தன்)

From நூலகம்
Name திருநாவுக்கரசு
Pages தம்பிராசா
Pages சிவபாக்கியம்
Birth 1932.12.14
Pages 2000.07.10
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, தம்பிராசா (1932.12.14 - 2000.07.10) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், கவிஞர், பயிற்சி பெற்ற ஆசிரியர், அதிபர், மேடைப்பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி. இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் நாவேந்தன் என்னும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், குறுங்காவியங்கள், கட்டுரை நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

இவர் தனது பதின்னைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்து தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். இவர் ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன் போன்ற புனைபெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளில் சமுதாய அவலங்கள், சாதாரண மக்களின் பிரச்சனை- மூடத்தனம்- தீண்டாமையைக் கருத்துக்கள் கருப்பொருளாகியுள்ளன. இவர் பல்கலைவேந்தன் இளங்கோவனின் சகோதரராவார். வாழ்வு (சிறுகதை - சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது- 1964), தெய்வ மகன் (சிறுகதைத் தொகுதி), சிறி அளித்த சிறை(ஈழத்தமிழ சட்ட மறுப்பு போராட்ட முதல் நூல்), சிலப்பதிகாரச் செந்நெறி (ஒரு சொற்பொழிவு), நாவேந்தன் கட்டுரைகள், நாவேந்தன் கவிதைகள் ஆகியன இவரது நூல்கள்.

இவர் யாழ். மாநகரசபையின் பிரதி மேயராகப் பதவி வகித்ததுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். இவரது "வாழ்வு" என்னும் சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. இவரது நினைவாக யாழ். இலக்கிய வட்டம் ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 242
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 44
  • நூலக எண்: 13279 பக்கங்கள் 1-154

வெளி இணைப்புக்கள்