Name | புஷ்பராணி, திருச்செல்வம் |
Pages | மாணிக்கப்பிள்ளை |
Birth | 1950.12.09 |
Place | நெல்லியடி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புஷ்பராணி, திருச்செல்வம் (1950.12.09 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கப்பிள்ளை. இவர் இணுவையூர் தவில் மேதை எம். ஆர். சின்னராஜாவிடம் தவில் இசையைக் கற்று ஏறக்குறைய 35 வருடங்களாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
இவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது திறமையைக் காட்டியுள்ளார். இவருக்குக் கரதிலக இசைச்செல்வி, கலைஞானச்சுடர், தவில் இளவரசி போன்ற பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 98