ஆளுமை:பேரம்பலம், கோணாமலை
From நூலகம்
Name | பேரம்பலம் |
Pages | கோணாமலை |
Pages | சிவகாமி அம்மையார் |
Birth | 1859.01.24 |
Pages | 1935 |
Place | வேலணை |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பேரம்பலம், கோணாமலை (1859.01.24 - 1935) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கோணாமலை; தாய் சிவகாமி அம்மையார். இவர் ஆரம்பத்தில் அவ்வூரிலுள்ள அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றுப் பின்னர் கனகசபைப் பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று வந்தார். அதன் பின்பு கந்தப் பிள்ளையிடம் சங்க நூல்களையும் உயரிய தமிழ் இலக்கணங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்றார். இவர் வேலணை இலந்தைக்காட்டு சித்தி விநாயகர் இரட்டைமணிமாலை, வண்ணை சிலேடை வெண்பா, கடம்பர் யமகவந்தாதி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 245-247
- நூலக எண்: 963 பக்கங்கள் 175-176