ஆளுமை:பொன் தியாகராஜா

From நூலகம்
Name பொன் தியாகராஜா
Birth
Place வேலணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன் தியாகராஜா யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வேலணையின் சிறப்புக்களையும் ஆன்மீகத்தின் சிறப்புக்களையும் பல அறிஞர்களிடமிருந்து கேட்டு அறிந்து நூலாக்கியிருக்கின்றார். இவர் நிலமாகி, வெந்தனம், நெஞ்சத்துள் நெருப்பு ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் அபிராமி அம்மன் பஜனைப்பாடல்கள், விநாயகர் பக்தி பஜனைப் பாமாலை ஆகிய நூல்களுடன் பச்சை இறகு என்ற ஹைக்கூ கவிதைத் தொகுதியையும் வெளியிட்டவர். இவர் அருளமுதம் என்ற பெயரில் சிறந்த ஆன்மீக நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். வேலணையூர் பொன்னண்ணா என்பது இவருடைய புனைபெயராகும்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 453
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 367

வெளி இணைப்புக்கள்