ஆளுமை:மகேந்திரன், கந்தையா

From நூலகம்
Name மகேந்திரன்
Pages கந்தையா
Pages தங்கம்மா
Birth 1951
Pages 1996
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், கந்தையா (1951 - 1996) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், பேச்சாளர், சமூக சேவையாளர். இவரது தந்தை கந்தையா; தாய் தங்கம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியைத் திருநாவுக்கரசு வித்தியாசாலை, கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலயம் என்பவற்றிலும் உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியிலும் பயின்றதுடன் இலங்கைச் சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினர். இவர் இந்தியாவில் தனது எம்.ஏ. பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் எஸ். கே. மகேந்திரன் என்னும் புனைபெயரில் எழுதியுள்ளார். இவரது படைப்பில் 'எஸ். கே. மகேந்திரன் சிறுகதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பும், 'என்று முடியும் எங்கள் போட்டிகள்' என்னும் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இவர் கனேடிய வானொலியில் பணிபுரிந்துள்ளார். இவரது ஆற்றலின் சிறப்பைக் கெளரவிக்கும் முகமாக, இவரது அரசியல், இலக்கியம், சமயம், மொழியியல் சார்ந்த உரைகளை ஒலி நாடாவாகவும் குறுந்தட்டுக்களாகவும் கனேடிய வானொலியினர் வெளியீடு செய்துள்ளனர்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 450


வெளி இணைப்புக்கள்