ஆளுமை:மோகனாம்பிகை, கணேசன்

From நூலகம்
Name மோகனாம்பிகை, கணேசன்
Birth 1934.04.11
Place சாவகச்சேரி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகனாம்பிகை, கணேசன் (1934.04.11 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கல்வியைக் கல்வயல் ஶ்ரீ சண்முகானந்தா வித்தியாசாலையிலும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். இசையார்வம் கொண்ட இவர், இராமநாதன் நுண்கலைப் பீடத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இசையைப் பயின்று கல்வயல் ஶ்ரீ சண்முகானந்தா வித்தியாசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, வரணி மகா வித்தியாலயம், சரசாலை கணேசர் வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் இசை ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் தனது முதலாவது இசைக் கச்சேரியை பெருங்குளம் பிள்ளையார் கோவிலில் நிகழ்த்தினார். தொடர்ந்து பல நடன அரங்கேற்றங்களுக்குப் பாடல் பாடியதோடு ஆலய நிகழ்வுகள், திருமண விழாக்கள், வரவேற்பு நிகழ்வுகள் என்பற்றிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். அத்தோடு இவரது இசைக் கச்சேரி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் திறப்பு விழாவிலும் நிகழ்த்தப்பட்டது. இவர் இலங்கையின் முதற்தர இசைக் கலைஞராக 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திகழ்ந்துள்ளார்.

இலங்கை வந்தபோது டி. கே. பட்டம்மாள் இவரது திறமையைப் பாராட்டி ஈழத்து சுந்தராம்பாள் என அழைத்துக் கௌரவமளித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 77-78