ஆளுமை:வரதராஜன், சுந்தரமூர்த்தி

From நூலகம்
Name வரதராஜன்
Pages சுந்தரமூர்த்தி
Birth 1955.05.02
Place தெல்லிப்பளை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராஜன், சுந்தரமூர்த்தி (1955.05.02 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரமூர்த்தி. தனது ஆரம்பக் கல்வியைத் தெல்லிப்பளை சைவப்பிரகாசக் கல்லூரியிலும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்ற இவர், ஆரம்ப இசைப் பயிற்சியைத் தனது பேரனாரிடமும் க. பா. சின்னராசாவிடமும் பயின்றார். இவர் வட இலங்கை சங்கீத சபையில் பயின்று சங்கீத கலா வித்தகர் பட்டத்தையும் 1982 இல் இராமநாதன் அக்கடமியால் இசைக் கலாமணிப் பட்டத்தையும் பெற்றதுடன் இந்திய மிருதங்கப் பேராசான் ஏ. எஸ். இராமநாதனிடமும் பயின்றார். 1984 - 1990 ஆம் ஆண்டு வரை சங்கீத ஆசிரியராக நுவரெலியாவில் நியமனம் பெற்ற இவர், 1990 - 2002 வரை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் 2003 - 2006 வரை தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபை இசைக் கல்லூரியில் அதிபராகவும் மிருதங்க ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஏ. திலகேஸ்வரனின் இசைக் கச்சேரிக்கு 1980 ஆம் ஆண்டு பக்கவாத்தியம் வாசித்துள்ள இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தாள வாத்தியக் கலைஞராக வானொலியில் வாசித்து வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக முள்ளியவளை சாயி ஆச்சிரமத்தினால் மிருதங்க லயஞான வித்தகர் என்ற பட்டமும் 2004 இல் வலிகாமம் வடக்குக் கலாச்சாரப் பேரவையினால் கலைச்சுடர் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 106-107