ஆளுமை:வேதக்குட்டி ஐயர்
From நூலகம்
Name | வேதக்குட்டி ஐயர் |
Birth | |
Place | காரைநகர் |
Category | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேதக்குட்டி ஐயர் காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார், பூசகர். இவர் காரைநகரில் சைவத்தையும் தமிழையும் காத்த திரு ச. அருணாசலத்தின் நண்பர். இவர் அருணாசலத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சைவபரிபாலன வித்தியாசாலை உருவாக்குவதற்குத் தேவையான நிலத்தை 1890 இல் தருமசாதனம் செய்து கொடுத்தார். இதனால் அப்பாடசாலை ஐயர் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டது.
இவர் வைத்தியம், சோதிடம் ஆகிய கலைகளில் ஈடுபாடுடையவர். இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிக வயசான காலத்திலும் பூசை செய்து வந்தார். இவர் வறிய மக்களுக்குப் பிரதிபலன்பாராது மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 282-283