ஆளுமை:வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார்

From நூலகம்
Name வேன்மயில்வாகனப்புலவர்
Pages அரிகரபுத்திரச் செட்டியார்
Pages முத்தாச்சி அம்மையார்
Birth 1865
Pages 1912
Place அச்சுவேலி
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; தாய் முத்தாச்சி அம்மையார். இவர் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடமும் ஆறுமுகநாவலரிடம் சைவ சித்தாந்தத்தையும் கற்றார். பல நூல்களைக் கற்றறிந்ததுடன் பல சிறப்புக் கவிகளும் பாடியுள்ளார்.

இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன் "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர். இவர் தனது 37 ஆவது வயதில் தேவகோட்டையைத் தனவைசியரின் வேண்டுகோளிற்கிணங்கி அங்கு சென்று கற்பித்துப் பின் கொழும்பிற்கு வந்து 3 ஆண்டுகள் கல்வி கற்பித்தார் என்று கூறப்படுகின்றது.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 260
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 111-113
  • நூலக எண்: 963 பக்கங்கள் 212-214