ஆளுமை: சரஸ்வதி ஜெயராசா

From நூலகம்
Name சரஸ்வதி
Pages கனகசபை
Pages கற்பகம்
Birth 1946.01.15
Pages -
Place யாழ்ப்பாணம்
Category -
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி ஜெயராஜா 1946.01.15 ஆம் ஆண்டு நயினாதீவில் பிறந்தார். இவருடைய தந்தை கனகசபை , தாயார் கற்பகம் ஆவார். இவர் ஆரம்பக் கல்வியினை நயினாதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயம் என்னும் பாடசாலையில் கல்வியினை கற்றார். இடைநிலைக் கல்வியை வேலணை மத்திய கல்லூரியிலும் மற்றும் இராமந்தான் மகளிர் கல்லூரியிலும் கல்வியினை பயின்றார். இவர் உதவி விரிவுரையாளராக தற்காலிகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பணி புரிந்தார். பின்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்திலும் , புனித மேரிஸ் வித்தியாலயம், திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியிலும் ஆசிரியராக கடமை புரிந்தார்.