ஆளுமை:அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன்
தந்தை சுலுத்தான் முகியித்தீன்
பிறப்பு
இறப்பு 1918
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன் ( - 1918) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவருடைய தந்தை சுலுத்தான் முகியித்தீன். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டுருந்தார். இலங்கை அரசாங்கத்தின் எழுதுவினைஞராக கடமையாற்றிய இவர் முஸ்லிம் மக்களிடையே முதன் முதலாக அரசாங்க சேவையிற் சேர்ந்து கொண்டவராக கருதப்படுகின்றார்.

குலாம் காதிறு நாவலர் இயற்றியஆரிபுநாயகம், நாகூர்ப் புராணம், பிக்குமாலை, திரிமக்கா திரிபந்தாதி ஆகிய நூல்களுக்கு இவர் சாற்றுக்கவி வழங்கியுள்ளதோடு திருப்புகழ்ப் பாவணி, நவரத்தினத் திருபுகழ், குதுபு நாயக அனுசாசனம் ஆகிய நூல்களை இயற்றியுமுள்ளார். இவற்றில் குதுபு நாயக அனுசானம் 244 பாடல்களைக் கொண்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 06-07