ஆளுமை:அந்தனி ஜீவா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தனி ஜீவா
பிறப்பு 1944.05.26
ஊர் கொழும்பு
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தனி ஜீவா (1944.05.26 - ) மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்; கவிஞர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வரும் இவர் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியராவார். மேலும் மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வருகிறார்.

1970களின் பின் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாக கொண்ட அக்கினிப் பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார். இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. 1980களின் பின் தெரு நாடகங்களை கொழும்பு, மலையக பகுதிகளில் நடாத்தினார்.

மலையக மாணிக்கங்கள், குறிஞ்சிக் குயில்கள், திருந்திய அசோகன், மலையகத் தொழிற்சங்க வரலாறு, மலையகமும் இலக்கியமும், சிறகு விரிந்த காலம், திருந்திய அசோகன், ஒரு வானம்பாடியின் கதை ஆகிய நூல்களை எழுதியுள்ள இவர் தான் செயலாளராக பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 25-35
  • நூலக எண்: 10318 பக்கங்கள் 09-13
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 74-77
  • நூலக எண்: 4471 பக்கங்கள் பின் அட்டை
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 41-53
  • நூலக எண்: 4174 பக்கங்கள் 03-05
  • நூலக எண்: 10201 பக்கங்கள் 23
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அந்தனி_ஜீவா&oldid=184751" இருந்து மீள்விக்கப்பட்டது