ஆளுமை:அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பிகைபாகர்
பிறப்பு 1854
இறப்பு 1904
ஊர் இணுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகைபாகர் (1854-1904) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த புலவர். ஆறுமுகநாவலரிடத்தில் தொல்காப்பியம், சேனாவரையம் ஆகியவற்றையும் நடராசையர் அவர்களிடத்தில் சிவஞானசித்தியாரையும் கற்றுத்தேர்ந்த இவர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் உற்ற நண்பராக விளங்கியதோடு இருவருமாக பல இலக்கியப்பணிகளை இணைந்து ஆற்றினர்.


இவர் இணுவை அந்தாதி, தணிகைப்புராண உரை (நகரப் படலம்வரை), சூளாமணி வசனம் முதலியன நூல்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டார். தணிகைப்புராணம் முழுவதற்குமான பொழிப்புரையையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 241
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 102
  • நூலக எண்: 963 பக்கங்கள் 14