ஆளுமை:அருள்பிரகாசம், கந்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:06, 16 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருள்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள்பிரகாசம்
தந்தை கந்தையா
தாய் நேசம்மா
பிறப்பு 1931.09.16
ஊர் துன்னாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள்பிரகாசம், கந்தையா (1931.09.16 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கந்தையா. இவர் துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்திலும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் ஆனந்தாக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று 1954ஆம் ஆண்டு விலங்கியல் சிறப்பு பட்டதாரியானார். பின் இங்கிலாந்து Wales பல்கலைக்கழகம் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு Marine Biologyஇல் கலாநிதிப்பட்டம் பெற்று 1963இல் நாடு திரும்பினார். மேலும் ஓர் பல்கலைக்கழகத்தில் சேவையற்றுகின்ற காலத்தில் கிடைக்கக்கூடிய அதி உயர் பட்டமாகிய பேராசிரியர் பட்டத்தையும் இவர் கொழும்புப் பல்கலைகழகத்தில் பெற்றுக்கொண்டார்.

க.பொ.த. உயர்தர விலங்கியல் பாட வினாக்களை இவர் தயாரித்ததோடு விலங்கியல் பரீட்சையின் பிரதான கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் இவர் கடமையாற்றினார். மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விளங்கியல் துறை தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். தற்போதுள்ள கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் University College ஆக 1981இல் ஆரம்பிக்கப்பட்டு பேராசிரியர் S. Rajendram அவர்களை பணிப்பாளராக கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இயங்கி வர 1985இல் பணிப்பாளர் பதவியை இவர் ஏற்று அதை ஓர் தனிப் பல்கலைக்கழகம் ஆக்கும் வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வெற்றிகண்டு அதற்கு கிழக்கு பல்கலைக்கழகம் என பெயரிட்டு அதன் முதலாவது துணை வேந்தர் பதவியை ஏற்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கடமையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11851 பக்கங்கள் 06-09