ஆளுமை:ஆதம்பாவா, உதுமாலெவ்வை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆதம்பாவா
தந்தை உதுமாலெவ்வை
தாய் சல்ஹா உம்மா
பிறப்பு 1939.06.15
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆதம்பாவா, உதுமாலெவ்பை (1939.06.15 - ) அம்பாறையை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை உதுமாலெவ்வை; தாய் சல்ஹா உம்மா. சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடகாலமாக தமிழ்மொழி ஆசானாக கடமையாற்றியுள்ளார்.

1961ஆம் ஆண்டு மலையருவி எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் தடம்பதித்தார். அன்றிலிருந்து 45 சிறுகதைகளையும், 48 உருவகக் கதைகளையும், 55 கவிதைகளையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட பல்துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் இதுவரை நாங்கள் மனித இனம், காணிக்கை, பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் இரங்கல் கவிதைத் தொகுதி ஆகிய மூன்று நூல்களையும் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகள் மணிக்குரல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மாலைமதி, ஸாஹிரா போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவரது திறமைக்காக கலாபூஷணம் விருதும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 50-53