ஆளுமை:இந்திரகுமார், க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்திரகுமார்
பிறப்பு
இறப்பு 2008.12.21
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரகுமார், க. ( - 2008.12.21) ஓர் எழுத்தாளர், கலைஞர், மருத்துவர். இவர் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் யாழ் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் மருத்துவக் கல்லூரியில் கல்விகற்று மருத்துவர் ஆனார். 1983இல் புலம்பெயர்ந்து இலண்டன் சென்றார். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது வீரகேசரியில் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் 1972இல் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது. டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒர் அறைகூவல், விண்வெளியில் வீர காவியங்கள், இலங்கேஸ்வரன் தீ மிதிப்பும் எரிகின்ற உண்மைகளும் ஆகியன இவரது ஏனைய நூல்கள். இவர் வாடைக்காற்று திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 447-449
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 126-130