ஆளுமை:இராசரத்தினம், சிதம்பரம்பிள்ளை

From நூலகம்
Name இராசரத்தினம்
Pages சிதம்பரம்பிள்ளை
Pages சின்னம்மா
Birth 1916.07.06
Place வேலணை
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சிதம்பரம்பிள்ளை (1916.07.06 - ) அவர்கள் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை சிதம்பரம்பிள்ளை; தாய் சின்னம்மா. இவர் தனது 19 ஆவது வயதில் கரம்பன் சிவகுருநாத வித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். கரம்பன் சிவகுருநாத வித்தியாலயம், வேலணை சரஸ்வதி வித்தியாலயம் ஆகியவற்றில் 34 வருடங்கள் சிறந்த ஆசிரியராக மிளிர்ந்த இவர், இளைப்பாறும் போது ஆத்திசூடி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

இவரது சமூக வாழ்க்கை 1944 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இவர் கிராம சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், போன்ற பல குழுக்களிலும், சங்கங்களிலும் பதவி வகித்தார். இவர் கிராம சங்கத் தலைவராக இருந்த போது நூல் நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டு, சந்தைகள் வளமூட்டப்பட்டு, பல நன்னீர்க் கிணறுகள் வெட்டி மக்களின் நலனுக்காக பங்காற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 328-332