"ஆளுமை:இராசரத்தினம், வஸ்தியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

05:08, 12 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசரத்தினம்
தந்தை வஸ்தியாம்பிள்ளை
தாய் அந்தோனியா
பிறப்பு 1925.06.05
இறப்பு 2001.02.22
ஊர் மூதூர், திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், வஸ்தியாம்பிள்ளை (1925.06.05 - 2001.02.22) திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை; தாய் அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். மட்டக்களப்பு அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

சுருக்கமாக வ. அ. என அறியப்படுபடும் இவர் ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் தினகரன், வீரகேசரி, சுதந்திரன் தினபதி, சிந்தாமணி போன்ற இதழ்களில் வெளிவந்தன.

துறைக்காரன், கொழுகொம்பு, கிரௌஞ்சப் பறவைகள், ஒரு காவியம் நிறைவு பெறுகிறது, ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது, தோணி, பூவரசம் பூ, மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு, இலக்கிய நினைவுகள் போன்றவை இவரது நூல்கள். இவற்றில் தோணி நாவலுக்கு 1962 இல் சாகித்திய மண்டல விருது கிடைத்தது. கலாபூசணம் விருதும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 104-107
  • நூலக எண்: 3771 பக்கங்கள் 131
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 75-76