ஆளுமை:இராசேந்திரம், தீயோ முடியப்பு

From நூலகம்
Name இராசேந்திரம்
Pages தீயோ முடியப்பு
Birth 1907.12.17
Place பாசையூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், தீயோ முடியப்பு (1907.12.17 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை தீயோ முடியப்பு. இவர் தனது ஆரம்பக் கல்வியை பாசையூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும், கொழும்புத்துறை புனித சூசையப்பர் பாடசாலையிலும், பின்னர் மேற்படிப்பை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றார்.

இவர் 1930 ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்து அண்ணாவியாராக இருந்து நாடகங்களை உருவாக்கித் தானும் அதில் நடித்துப் பல கலைஞர்களை உருவாக்கியதோடு, பாஷையூர் வளர்பிறை நாடக மன்றத்தினை உருவாக்கினார். கண்டியரசன், சத்தியானந்தன் ஆகிய இசை நாடகங்களையும், எஸ்தாக்கியார், மாணிக்கப்பரல் போன்ற நாட்டுக்கூத்துக்களையும் எழுதியுள்ளார்.

இவரது திறமைக்காக கலையரசு சொர்ணலிங்கம் அவர்களினால் நாடக பூஷணம் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 131-132