ஆளுமை:இராசையா, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:46, 10 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசையா, கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா, குமாரவேலு
தந்தை குமாரவேலு
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1928.05.15
ஊர் முரசுமோட்டை, கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கண்டாவளைக் கவிராயர் எனப் பலராலும் அறியப்பட்ட கு. இராசையா (1928.05.15 - ) கிளிநொச்சி, முரசுமோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குமாரவேலு, தாய் சின்னப்பிள்ளை. இவர் கண்டாவளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கரவெட்டி திரு இருதயக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்றார். பாடசாலை படிப்பை முடித்து 1952ல் வீடு திரும்பிய இவர் தனது பிதாவின் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதோடு சமூக சேவையில் ஈடுபட்டார்.

1956இல் ஊரியான் கிராம அதிகாரியாக நியமனம் பெற்று 1963வரை கிராம அதிகரியாகவும், கிரம சேவை நிலதாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார். இவரது முதல் ஆக்கம் 1953ஆம் ஆண்டு ஐக்கியத் தீபம் என்னும் பத்திரிகையில் வெளியானது. இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 136-138