ஆளுமை:இராசையா, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா, குமாரவேலு
தந்தை குமாரவேலு
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1928.05.15
ஊர் முரசுமோட்டை, கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கண்டாவளைக் கவிராயர் எனப் பலராலும் அறியப்பட்ட கு. இராசையா (1928.05.15 - ) கிளிநொச்சி, முரசுமோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குமாரவேலு, தாய் சின்னப்பிள்ளை. இவர் கண்டாவளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கரவெட்டி திரு இருதயக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்றார். பாடசாலை படிப்பை முடித்து 1952ல் வீடு திரும்பிய இவர் தனது பிதாவின் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதோடு சமூக சேவையில் ஈடுபட்டார்.

1956இல் ஊரியான் கிராம அதிகாரியாக நியமனம் பெற்று 1963வரை கிராம அதிகரியாகவும், கிரம சேவை நிலதாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார். இவரது முதல் ஆக்கம் 1953ஆம் ஆண்டு ஐக்கியத் தீபம் என்னும் பத்திரிகையில் வெளியானது. இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்களை இவர் வெளியிட்டுள்ளார். இலங்கை இந்தியத் தல யாத்திரையில் 30 தலங்களை தரிசித்து இவர் பாடித்துதித்துவந்த படல்கள் கோபுர வாயில் எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றது.

1986இல் தேசிய விருதும் கவிமணிப் பட்டமும், 2000இல் கோபுரவாயில் எனும் நூலுக்கு பணப்பரிசும் சன்றிதழும், 2000இல் கந்தகோட்டை மன்மியம் என்னும் 180 பக்கங்களைக் கொண்ட காவியத்திற்கு அகில இலங்கை சாகித்திய விருதும் பணப்பரிசும், 2002இல் கலாபூஷண விருதும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 136-141