ஆளுமை:எட்வேட், சூசைப்பிள்ளை

From நூலகம்
Name எட்வேட்
Pages சூசைப்பிள்ளை
Pages அன்னம்மா
Birth 1943.08.29
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எட்வேட், சூசைப்பிள்ளை (1943.08.29 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை; தாய் அன்னம்மா. அர்ச். பிரான்சிஸ் சேவியர் (சென்சேவியர்) பாடசாலை, கோணேஸ்வரர் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி கற்றுள்ளார். 2006 இல் தமிழ் அலை பத்திரிகையில் இவரது முதல் கதையான மனசிற்கு வயசில்ல பிரசுரமாகியது. தொடர்ந்து மல்லிகையில் மனிதசாதி என்ற சிறுகதையும் வெளியாகியது. தொடர்ந்து வீரகேசரி, தினக்குரல், தினகரன், பூங்காவனம், ஜீவநதி உட்பட மேலும் பல இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

Resources

  • நூலக எண்: 14676 பக்கங்கள் 03-05