ஆளுமை:எட்வேட் நவரட்ணசிங்கம், சி. வி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 19 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=எட்வேட் நவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எட்வேட் நவரட்னசிங்கம், சி. வி.
பிறப்பு
ஊர்
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.வி.எட்வேட் நவரட்னசிங்கம் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் முதல் அதிபராவார். 1946ஆம் ஆண்டு இலவச கல்வி திட்டத்தின் கீழ் ஆங்கில மொழி மூல அரசினர் கனிட்ட வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் அதிபராக அரசினால் நியமிக்கப்பட்டவர். இவர் பதவியேற்ற பொழுது வித்தியாலயத்திற்கென சொந்தக் காணியோ, கட்டிடங்களோ இருக்கவில்லை அப்போதைய விதானையார் சு.நாகேந்திரத்தினால் வழங்கப்பட்ட சிறிய ஓலைக் கொட்டிலில் அமைந்த பாடசாலையிலேயே தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். இருபத்தி மூன்று மாணவர்களும் மூன்று ஆசிரியர்களுமே ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனபோதும் அதிபரின் நிர்வாகத் திறமையும், அவரின் சேவை மனப்பான்மையும் கண்ட பெற்றோர் மற்றைய பாடசாலைகளில் மேல் வகுப்புக்கள் படித்துக் கொண்டிருந்த தம் பிள்ளைகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதிபரின் அயராத முயற்சியினால் பாடசாலைக்கென சொந்தக் காணி பெறப்பட்டு, வெளியூர்களில் இருந்து மாணவர்கள் வந்து சேர்ந்து 1950இல் இப் பாடசாலையின் தரம் மகாவித்தியாலயமாக மாறியது குறிப்பிடதக்கது. விஷேட பாடங்களுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். மாணவர்களும் பொதுப் பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். இவர் பாடசாலையில் முயல், கிளி, புறா என்பவற்றையும் வளர்த்து மரங்களையும் பாடசாலையின் சூழல்களில் நாட்டிப் பாடசாலை சுற்றுப்புறத்தை ஒரு கண்கவர் சோலையாக மாற்றினார். இவற்றின் பலனாக பின்னர் 2010.04.17 அன்று சி.வி.எட்வேட் நவரட்னசிங்கம் அவர்களின் உருவச்சிலை திறப்பு வைபவம் தற்போதைய மகா வித்தியாலய அதிபர் சா.கிருஷ்ணதாஸ் தலமையில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 125-127