ஆளுமை:எமானுவேல் கமலநாதன், சாமுவேல்

From நூலகம்
Name எமானுவேல் கமலநாதன்
Pages உவில்லியம் சாமுவேல்
Pages மேரி மாகறற் ஆனந்தம்
Birth 1925.04.27
Place மட்டக்களப்பு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எமானுவேல் கமலநாதன், உவில்லியம் சாமுவேல் (1925.04.27 - ) மட்டக்களப்பு, கல்குடாவைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை உவில்லியம் சாமுவேல்; தாய் மேரி மாகறற் ஆனந்தம். இவர் ஆரம்பக் கல்வியைக் கோட்டைமுனை தூய செபஸ்தியார் றோ.க.மி.த.ஆண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை தூய மிக்கேல் கல்லூரியிலும் கற்று பெரதேனியாப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், பிரஞ்சு, சிங்களம் முதலிய மொழிகளில் தேர்ந்தவர்.

காயத்திரி, மனுவேலன், கழப்பூர் முழரியார் ஆகிய புனைபெயர்களில் யார் குற்றவாளி (1950), ஈழத்து முதலரசி (1956), யாருக்குப் பைத்தியம் (1974), ஈயுஜின் ஓ கெகிகல்லின் நாடகத் தழுவல் (1974), தூக்குக் கயிறு (1975), குறை உணர்ந்த வாலி இசை நாடகம் (1973), கனவுக்கும் நனவுக்கும் இடையில் (1976), இப்படியும் சில மனிதர் (1978) ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். இவர் பேரா.கணபதிப்பிள்ளை எழுதிய துரோகிகள் நாடகத்தில் இரும்பொறையாக நடித்துள்ளார். யாழ் நூல் அரங்கேற்றம் (1966), நந்திவர்மன் காதலி (1967) ஆகியவற்றிற்கு நெறியாள்கை செய்துள்ளார். அத்துடன் தூய மிக்கேல் கல்லூரி நூற்றாண்டு விழா மலர் (1974), விடிவானம் பத்திரிகையில் மட்டக்களப்பிலிருந்து தென் அமெரிக்கா வரை என்ற பயணத் தொடர் கட்டுரைக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், ஈழகேசரி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இடம்பெற்றன.

தூயமிக்கேல் கல்லூரியின் ஆசிரியராக 1948-1973 வரை பணிபுரிந்து பின் அதிபராகப் பதவி உயர்வு பெற்று 1986 வரை பணி செய்தார். இவர் இலங்கைக் கலைக்குழு உறுப்பினராகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக கலை, கலாச்சாரபீட ஆலோசனைச் சபையின் உறுப்பினராகவும் பணி புரிந்தார். அத்தோடு சமய. சமூக, கல்வித் தாபனங்களில் சமயப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவர் தேசியத் தமிழ் சாகித்திய விழாவில் 'தமிழ் ஒளி' விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தினால் இலக்கிய கலாநிதிப்பட்டமும் பெற்றுக்கொண்டார்.


Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 76-80