ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏரம்பையர்
தந்தை சுப்பிரமணிய சாத்திரியார்
பிறப்பு 1847.02.29
இறப்பு 1914.01.08
ஊர் மாதகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார் (1847.02.29 - 1914.01.08) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரியார். இவர் பல நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் கவிகள் பாடியதுடன் சிறப்புப்பாயிரங்களும் அளித்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்.

இவர் நல்லூர் சம்பந்தப்புலவர், நீர்வேலி சங்கர பண்டிதர், ஆறுமுகநாவலர் ஆகியோரிடம் கல்வி கற்றார். இவர் தந்தையாரிடம் தமிழையும் வடமொழியையும் சிறிது காலம் கற்றதுடன் சங்கானை வேலுப்பிள்ளை ஆசிரியரிடத்திலும் நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடத்திலும் தமிழிலக்கியங்களை இலக்கியம் கற்றார். வண்ணார்பண்ணையில் தொடங்கப்பெற்ற சைவபரிபாலன சபைக்கு சைவப் பிரகாசகராகவ்கராகவும் விளங்கினார். ஆறுமுகநாவலரிடம் வண்னையில் நிறுவிய தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினராக விளங்கினார். தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியை கற்றார். பின் சங்கானை வேலுப்பிள்ளை உபாத்தியாரிடம் இலக்கண இலக்கியங்களை சித்தாந்த நூல்கள் ,

சங்கர பண்டிதரிடம் சமஸ்கிருத நூல்களையும் கற்றார். நிர்வாண தீட்சை பெற்றவர். சைவப் பிரசங்களை ஊர்கள் தோறும் செய்தார். வடமொழி நூல்களையும்,நீதி சாஸ்திர நூல்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தார். பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். நூல்களுக்குச் சிறப்புப் பாயிரமும் பாடியுள்ளார். இவர் கீரிமலையில் த. கைலாசபிள்ளை ஆரம்பித்த சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி தமிழும் சமஸ்கிருதமும் மாணவர்களுக்குக் கற்பித்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 266
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51-53
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 118-122
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 49-56