"ஆளுமை:கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி (பண்டிதமணி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 30: வரிசை 30:
 
{{வளம்|4413|45-53}}
 
{{வளம்|4413|45-53}}
 
{{வளம்|15515|68}}
 
{{வளம்|15515|68}}
 +
{{வளம்|15514|33-39}}

03:42, 10 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை சின்னத்தம்பி
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1899.06.27
இறப்பு 1986.03.13
ஊர் மட்டுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி (1899.06.27 - 1986.03.13) யாழ்ப்பாணம் மட்டுவிலை சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் வள்ளியம்மை. மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்று கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலாநந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்றார்.

கண்ணகி தோத்திரம், கதிர்காம வேலவன் பவனி வருகிறான், இலக்கிய வழி, சைவ நற்சிந்தனைகள், பாரத நவமணிகள், கந்த புராண கலாசாரம், கந்த புராண போதனை, சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவைகள், இருவர் யாத்திரிகர், சமயக் கட்டுரைகள், இலக்கிய வழி, கம்பராமாயணக் காட்சிகள், கந்தபுராணம் தட்சகாண்டம் உரை, நாவலர், சிந்தனைச் செல்வம், நாவலரும் கோயிலும், சிந்தனைக் களஞ்சியம், கோயில், ஆறுமுக நாவலர், அன்பினைந்திணை, அத்வைத சிந்தனை, செந்தமிழ்க் களஞ்சியம், ஒளவை குறள் (மூலமும் தெளிவுரையும்), பத்தினி வழிபாடு ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

1951-இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் பண்டிதமணி தமிழ் என்ற பொருளில் ஆற்றிய உரை தமிழக அறிஞர்கள் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டது. அந்த உரையே அவருக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது. பண்டிதமணியின் தமிழ்த் தொண்டிற்காக இலங்கைப் பல்கலைக்கழகம் 1978, மே 31 ஆம் நாள் இலக்கியக் கலாநிதி என்ற கௌரவப்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1978 ஆகஸ்ட்14 ஆம் நாள் அன்றைய துணைவேந்தர் சு. வித்தியானந்தன் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கௌரவித்தார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10331 பக்கங்கள் 24-26
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 09
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 283-303
  • நூலக எண்: 4413 பக்கங்கள் 45-53
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 68
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 33-39