ஆளுமை:கனகசபாபதி, பூபாலபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபாபதி
தந்தை பூபாலபிள்ளை
தாய் சுந்தரம்மா
பிறப்பு 1945
ஊர் திருக்கோவில், மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945 - ) மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பூபாலபிள்ளை; தாய் சுந்தரம்மா. இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களைக் கொண்டவர். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ண மிசன் சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுப் பெரதேனியாப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.

இவர் திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கூத்துக் கலையில் ஈடுபாடு கொண்டு வில்விஜயன் என்னும் வடமோடிக் கூத்தைக் கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர். இவர் தனது படைப்பாற்றலுக்காய் சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியா, ஈரான் உட்பட பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். இவர் ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், ஜேர்மன்,பிரஞ்சு ஆலிய மொழிகளில் புலமை உடையவர். அமெரிக்க National Library of poetry இன் வெளியீடான The Path Not Taken என்ற ஆங்கிலக் கவிதை நூலில் இவரது Singing Dream என்ற கவிதை இடம்பெற்றது. இவர் கனடா மொன்றியல் ஈழத் தமிழர் ஒன்றியத் தலைவராகவும் பண்பாட்டுத் தமிழுறவு மன்ற கியூபெக் அமைப்பாளராகவும் இன்னும் பல அமைப்புக்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 172-173