ஆளுமை:கனகரத்தினம், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:08, 19 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகரத்தினம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1947.10.09
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரத்தினம், ஆறுமுகம் (1947.10.09 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர், நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். ஆலயங்களில் சொற்பொழிவு ஆற்றுவதுடன் புராண படலங்களையும் ஓதிவந்தார். 1977 இல் நாடகக் கலைஞனாகி அரிச்சந்திர மயான காண்டம், பட்டினத்தார், கோவலன் கண்ணகி நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் கண்ணகை அம்மன் ஊஞ்சற் பாட்டும் விநாயகர் அனுபூதி நூலுக்கு உரையும் எழுதியுள்ளார். இவரது சைவப்புலவர், திருமுறைச் செம்மல் ஆகிய பட்டங்களைக் கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 56
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 56