ஆளுமை:கனகராசா, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:09, 19 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகராசா
தந்தை கந்தசாமி
பிறப்பு 1946.07.18
ஊர் மாவிட்டபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகராசா, கந்தசாமி (1946.07.18 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், சோதிடர். இவரது தந்தை கந்தசாமி. ஆரம்பக் கல்வியை மாவிட்டபுரம் கிழக்கு வீமன்காமம் ஆங்கிலப் பாடசாலையிலும் உயர் கல்வியைத் தெல்லிபளை மகாஜனக் கல்லூரியிலும் கற்ற இவர், பண்டிதர் இ.நமசிவாயம், கனகராசா ஆகியோரிடம் கல்வி கற்றுள்ளார். பின் 1969 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் ஆளணி முகாமையாளராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

இவரது ஆக்கங்கள் ஈழநாடு, உதயன், ஞானச்சுடர், நல்லைக் குமரன் மலர், உலகத் தமிழர் பண்பாடு வெளியீடு, வலம்புரி, தினகரன், வீரகேசரி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

இவரது திறமைக்காக 2004 ஆம் ஆண்டு செல்வச் சந்நிதி ஆலய கலை பண்பாட்டுப் பேரவை ஞானக்கவி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 08