ஆளுமை:கருணாகரன், சிவராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 18 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கருணாகரன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரன்
தந்தை சிவராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1963.09.05
ஊர் இயக்கச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரன், சிவராசா (1963.09.05 - ) கிளிநொச்சி, இயக்கச்சியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவராசா. தாய் சிவபாக்கியம். இவர் இயக்கச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, பளை மகா வித்தியாலயம் (பளை மத்தியகல்லூரி) ஆகியவற்றில் கல்வி கற்றார். ஈரோஸ் அமைப்பின் பொதுமை பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

இவர் 1980 களின் முற்பகுதியிலிருந்து கவிதை, சிறுகதை, இலக்கியம், அரசியல், சமூகவியல் துறைகளில் விமர்சனம் எனப் பலதளங்களில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள், நெருப்பின் உதிரம், இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் ஆகிய கவிதை நூல்களையும் வேட்டைத்தோப்பு என்ற சிறுகதையையும் இப்படி ஒரு காலம் என்ற கட்டுரையையும் இவர் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்=


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 361