ஆளுமை:காவலூர் இராசதுரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 17 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காவலூர் இரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காவலூர் இராசதுரை
பிறப்பு 1931.10.13
இறப்பு 2014.10.14
ஊர் ஊர்காவற்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காவலூர் இராசதுரை (மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை) (1931 ஒக்டோபர், 13) ஊர்காவற்துறை கரம்பொனை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கலைக்கோலம் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். அதுமட்டுமல்லாது சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் தமது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகத்தை தயாரித்து வழங்கியதோடு, பொன்மணி என்ற இலங்கை திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாக தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் வசீகரா என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தை கொழும்பில் நிறுவினார் என்பது குறிப்பிடதக்கது. குழந்தை ஒரு தெய்வம், வீடு யாருக்கு, ஒரு வகை உறவு, விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம் போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 25


வெளி இணைப்புக்கள்