ஆளுமை:குகபாலன், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:34, 24 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகபாலன்
தந்தை சண்முகம் கார்த்திகேசு
தாய் கார்த்திகேசு பொன்னம்மா
பிறப்பு 24.02.1948
ஊர் இறுப்பிட்டி, 6ம் வட்டாரம், புங்குடுதீவு
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகபாலன், கார்த்திகேசு (1948.02.24 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர். இவரது தந்தை கார்த்திகேசு ("நுவரெலியா கார்த்திகேசு"); தாய் பொன்னம்மா. இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு சித்தி விநாயகர் வித்தியாலயம், நுவரெலியா திரித்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி 1971 ஆம் ஆண்டு புவியியற்துறைச் சிறப்புக் கலைப் பட்டதாரியாக வெளியேறிய இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் குடிசனத் தொகைக் கல்வியில் கொண்ட ஆர்வத்தால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார்.

1972 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் 1979 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றி, 1997 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் புவியியற்துறைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பேராசிரியர் குகபாலன் இதுவரை 50 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் 1994 இல் தனது தாயாரின் நினைவாகத் தீவகம் வளமும் வாழ்வும் நூலை எழுதினார். இதற்குச் சாகித்திய மண்டல பரிசும் வட கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 175-176