ஆளுமை:சண்முகநாதன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:49, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதன்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தங்கம்மா
பிறப்பு 1935.03.07
இறப்பு 1990.09.18
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், சுப்பிரமணியம் (1935.03.07 - 1990.09.18) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் தங்கம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பயின்று தாவரவியல் விஞ்ஞானப் பட்டதாரியானார்.

இவர் தனது ஆசிரியப் பணியை 1959 இல் ஆரம்பித்து அதிபராகிப் பின்னர் வேலணைக் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். மண்டைதீவு மகாவித்தியாலயத்தைக் கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். அத்துடன் வடமாகாண விஞ்ஞான ஆசிரிய சங்கத்தின் வெளியீடான 'விஞ்ஞானி' இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 366-370