ஆளுமை:சண்முகம், அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம், அருணாசலம்
தந்தை அருணாசலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகரிலே பிறந்து வளர்ந்த அருணாசலம் சண்முகம் காரைநகரிலேயே கல்வி கற்று உத்தியோகத்திற்காகா மலாயா சென்றவர். இளைப்பாறிய பின் மீண்டும் காரைநகர் வந்த அவர் யாழ்ப்பாணம் பறங்கித் தெருவில் நகை அடைவு பிடிக்கும் தொழிலைச் செய்தார்.

அத்தோடு பொதுச் சேவையில் ஈடுபட்ட இவர் சிவன் கோயில் திருப்பணிச் சேவையில் காலத்தையும் பொருளையும் செலவு செய்தார். காரைநகர்த் திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலய உற்பத்தி வரலாறும் திருப்பணி வேண்டுகோளும் என்ற நூலினைப் பிரசுரித்துத் திருப்பணி செய்தார். சிவன் கோவில் உள் வீதி மண்டபம் சண்முகம் அவர்களின் உபயமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 318-319