ஆளுமை:சரஸ்வதி, கந்தசாமி

From நூலகம்
Name சரஸ்வதி, கந்தசாமி
Birth 1931.04.05
Pages 1998.04.12
Place இணுவில்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி, கந்தசாமி (1931.04.05 - 1998.04.12) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவர் கண்ணாடி ஓவியம் வரைதல், மணப்பெண் அலங்கரிப்பு, கோலம் போடுதல், பூக்கள் வடிவமைத்தல், ஓவியம் வரைதல் ஆகிய துறைகளில் ஆற்றல் கொண்ட கலைஞராவார்.

இவர் ஆலய நிகழ்வுகள், திருமண வைபவங்கள், கலைவிழாக்கள், பாடசாலை விழாக்களின் போது வாயிலில் கோலங்கள் போடுவதுடன் ஆலயங்களின் திரைச் சேலைகள், சுவற் சித்திரங்கள் வரைவதிலும் ஆற்றல் மிக்கவர். ஆரம்பத்தில் வண்ணை ஶ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயத்தில் சரஸ்வதி, இலட்சுமி, காமாட்சி அம்பாள் படங்களை வரைந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்றார். இவர் விஸ்வகர்மாவின் திருக்கோலமுடைய ஶ்ரீ காயத்திரி திருவுருவினை மிகச் சிறப்பாக வரைந்த பெருமைக்குரியவர்

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 188