ஆளுமை:சற்குணம், மயில்வாகனம்

From நூலகம்
Name சற்குணம்
Pages மயில்வாகனம்
Pages தங்கச்சிப்பிள்ளை
Birth 1941.11.10
Pages 1981
Place காரைதீவு, அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சற்குணம், மயில்வாகனம் (1941.11.10 - 1981) அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனம்; தாய் தங்கச்சிப்பிள்ளை. இவர் காரைதீவு மத்திய மகாவித்தியாலயத்திலும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியைப் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் (தமிழ்) மன்னார் மாவட்டச் சனசமூக நிலைய உத்தியோகத்தராகவும் மட்டக்களப்பு மாவட்டச் சனசமூக நிலைய ஆய்வு அதிகாரியாகவும் நவகிரிநகர் கிராம சபையின் விசேட ஆணையாளராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், மலர்கள் என்பவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவருக்குக் கலைகளில் ஏற்பட்ட ஆர்வத்தினால் கூத்துக்கலை வளர்ச்சியிலும் பங்கெடுத்தார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 152-154