ஆளுமை:சிங்கராயர், முடியப்பு

From நூலகம்
Name சிங்கராயர்
Pages முடியப்பு
Birth 1938.02.24
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிங்கராயர், முடியப்பு (1938.02.24 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முடியப்பு. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்புத்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பயின்றதுடன் சி. ஞானப்பிரகாசம், செ.செல்வரத்தினம், வ. தியாகுப்பிள்ளை போன்றோர்களிடமும் கல்வி பயின்றார்.

இவர் தனது 20 ஆவது வயதில் எழுத்துத்துறையில் நுழைந்தார். தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு, பாதுகாவலன் ஆகிய பத்திரிகைகளில் ஆக்கங்களைப் படைத்துள்ளார். இவரது முதலாவது சிறுகதையான நப்பாசை 1964 ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து பாஷையூரானைப் பாடு, தூது போ தென்றலே, வியாகுல அன்னை வெண்பா, கூவிப்பறந்த கோகிலங்கள், மடு அன்னை பிள்ளைத்தமிழ், செம்மனந்தான் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 17