ஆளுமை:சிவசந்திரன், இராசரத்தினம்

From நூலகம்
Name சிவசந்திரன்
Pages இராசரத்தினம்
Birth
Place வேலணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசந்திரன், இராசரத்தினம் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், புவியியற்துறைப் பேராசிரியர். இவரது தந்தை இராசரத்தினம். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று யாழ்.பல்கலைக்கழகப் புவியியற்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

அகிலம் என்ற அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த இதழை வெளியிட்டுள்ளார். சினிமா விமர்சனங்களை எழுதியுள்ள இவர், மு. தளையசிங்கத்தின் பூரணி இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணி புரிந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இவர் கற்கின்ற போது வெளியிடப்பட்ட ஆறு கதைகள் சிறுகதைத் தொகுப்பில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. இவர் புவியியற் பாட நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற சிந்தனைக்கூடம் என்ற அமைப்பிலும் பணியாற்றி வருகின்றார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 24