ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனம்
தந்தை சிவலிங்கம்
தாய் ரோகினிதேவி
பிறப்பு 1961.05.31
ஊர் கோண்டாவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், சிவலிங்கம் (1961.05.31 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சிவலிங்கம்; தாய் ரோகினிதேவி. 2002இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு சமாதான நீதவானாகவும் கடமையாற்றியுள்ளார். கவிதையாக்கம், நாடகம், சொற்பொழிவு முதலான சிறப்பாற்றல் கொண்டவராகவும் விளங்கியுள்ளார். வல்லிபுரநாதர் பாமாலை, காளியம்பாள் கவிமாலை, பர்வதவர்த்தினிபாமாலை, முத்துமாரியம்மன் திருவூஞ்சல் போன்றன இவரது நூல்களாகும். வரகவி, கவிஜோதி, ஆசிரியமணி முதலான பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 65-66