ஆளுமை:ஜனகா நீக்கிலாஸ்

From நூலகம்
Name ஜனகா நீக்கிலாஸ்
Pages மனுவேற்பிள்ளை நீக்கிலாஸ்
Pages சிவசக்தி நீக்கிலாஸ்
Birth 1995.01.02
Place உருத்திரபுரம், கிளிநொச்சி
Category கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜனகா நீக்கிலாஸ் (1995.01.02- ) கிளிநொச்சி, உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை மனுவேற்பிள்ளை நீக்கிலாஸ்; தாய் நீக்கிலாஸ் சிவசக்தி. இவர் கிளி / சிவநகர் அ.த.க.பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கிளி/உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் கிளிநொச்சி மத்தியகல்லூரியில் உயர்தரத்தையும் கற்றுப் பின்னர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கிளையில் இளங்கலைமாணி (தமிழ் சிறப்புப்) பட்டமும் பெற்றுக் கொண்டார்.

2016 ஆம் ஆண்டு, திறந்த போட்டிப் பரீட்சை மூலம் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக நியமனம் பெற்ற இவர் இன்றுவரை (2021) கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார்.

கவிஞராகவும், கட்டுரையாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழும் இவர் சமூகநலன் சார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அதேவேளை 2021 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முதல் 'நடுகை' என்னும் கவிதைகளுக்கான மாத இதழின் இதழாசிரியராக செயற்பட்டு வருகிறார்.