ஆளுமை:டானியல், கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டானியல்
பிறப்பு 1927.03.25
ஊர் ஆனைக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டானியல், கே (1927.03.25 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாகும் முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் சிறுகதைகளுடன் உலகங்கள் வெல்லப்படுகின்றன, பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

அடித்தளச் சமூகத்தில் பிறந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகின்றார்கள்.

பஞ்சமரியப் படைப்பிலக்கிய முன்னோடி, மக்கள் தலைவர், மக்கள் விடுதலைப் போராளி, தலித் இலக்கியத்தின் முன்னோடி. இவர் சிறுவயதுல் வறுமையால் பீடிக்கப்பட்டமையால் 5 ஆம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டார். சிறு வயதிலிருந்து பல தொழில்களிக் ஈடுபட்ட இவர் 16 வயதிலிருந்து பொதுக் காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை யாழ்ப்பானப் பிரதேசத்தில் 1945 இல் ஆரம்பித்தார்.. இவர் வீரகேசரி, சுதந்திரன் உள்ளிட்ட பல இலங்கைப் பத்திரிகைகளிலும் ஜனசக்தி, தாமரை போன்ற பல தம்மிழக இதழ்களிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். சதந்திரன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அமரகாவியம் சிறுகதை பரிசு பெற்றது.சிற்பியின் ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியில் இவ்ரது உப்பிட்ட வரை சிறுகதை இடம்பிடித்துள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 20-28
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 66
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 118-120
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டானியல்,_கே.&oldid=198029" இருந்து மீள்விக்கப்பட்டது