ஆளுமை:தியாகராசபிள்ளை, சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசப்பிள்ளை, சோமசுந்தரம்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் கரம்பன்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரம் தியாகராசப்பிள்ளை அவர்கள் வேலணை கரம்பனைப் பிறப்பிடமாக கொண்ட ஓர் புலவராவார். ஆசிரியராகவும், கிராம அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் இளமைக் காலத்திலேயே பல நவயுகப் பாடல்களை யாத்துள்ளார். வடமொழி அறிவு நிரம்பப்பெற்ற ஓர் பண்டிதராகவும் திகழ்ந்தார்.

ஈழகேசரி, கலைமகள், சிவாஜி ஆகிய சஞ்சிகைகள் இவரது பாடல்களை தாங்கி வெளிவந்துள்ளன. சுந்தரர் பிள்ளைத்தமிழ் எனும் நூலை வெளியிட்டதோடு வடமொழியில் அமைந்த 'குமார சம்பவம்' எனும் காவியத்தை செய்யுள் வடிவில் மொழிமாற்றம் செய்துள்ளார். இவரது படைப்பான 'சோலைக்குயில்' என்ற கவிதை நூல் பலரது பாராட்டையும் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 14-15