ஆளுமை:தியாகராசா, பொன்னையா

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:06, 17 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:பொன்னையா தியாகராசா பக்கத்தை ஆளுமை:தியாகராசா, பொன்னையா என்ற தலைப்புக்கு வழிமாற்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசா, பொன்னையா
தந்தை ஆறுமுகம் பொன்னையா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1939.05.26
ஊர் வேலணை
வகை சமூக சேவையாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா தியாகராஜா(பொன்.தியாகராஜா) அவர்கள் வேலணை கிழக்கு மூன்றாம் வட்டாரத்தில் தவிடுதின்னி பகுதியில் சிலுகன் என்ற இடத்தில் 1939.05.26இல் பிறந்தார். இவர் சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி, கவிஞர். ஆரம்பக்கல்வியை வங்களாவடி சரஸ்வதி பாடசாலையிலும், வேலணை கிழக்கு கலவன் பாடசாலையிலும்(தற்போது வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் என அழைக்கப்படுகின்றது), வேலணை மேற்கு மத்திய கல்லூரியிலும் பயின்றார்.

கல்வியை நிறைவுசெய்ததும் இவரது செயற்பாடுகளால் இவரை சமூக சேவையாளனாகவும், அரசியல்வாதியாகவும், மேடைப்பேச்சாளனாகவும், நாடக நடிகனாகவும், பத்திரிகை எழுத்தாளனாகவும் சமூகம் பலகோணங்களில் இனம்கண்டு வரவேற்று நிற்கின்றது.

1981ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற இவர் தனது புலம்பெயர் வாழ்க்கையிலும் பெரும் மக்கள் பணி செய்துள்ளார். டெனீஸ் தமிழ் தோழமை ஒன்றியம் டென்மார்க், பாராஞ் தமிழர் அமைப்பு பாரிஸ், உலகத் தமிழர் பேரமைப்பு தமிழகம், உலகத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழகம், டென்மார்க் தமிழ் எழுத்தாளர் பேரவை, சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஜேர்மனி, உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம் மலேசியா போன்ற அமைப்புக்களின் உறுப்பினராகவும் நிர்வாகியாகவும் இருந்து தமிழ்ப்பணி செய்து வருகின்றார். தனது தாய்மண்ணின் ஆவணத்திரட்டாக அருளமுதம் எனும் நூலை வெளியீடு செய்துள்ளாதோடு பல கவிதை நூல்களையும் சமய நூல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 532A-532B