ஆளுமை:நவரத்தினம், கந்தையா.

From நூலகம்
Name நவரத்தினம்
Pages கந்தையா
Pages மங்களாம்மாள்
Birth 1898
Pages 1962
Place வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

Kalaipulavar Navarathinam kanthaiya.jpg

நவரத்தினம், கந்தையா (1898 - 1962) வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். இவரது தந்தை கந்தையா; தாய் மங்களாம்மாள். மத்திய கல்லூரியில் கல்வி பயின்று அக்கல்லூரியிலேயே வர்த்தகத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றியவர்

இவரின் கைப்பணித் துறைகளில் ஆற்றிவரும் பணிகளைக் கௌரவித்து, “இலங்கையிற் கலைவளர்ச்சி” என்னும் நூல் அறிமுக விழாவின் போது யாழ்ப்பாண மக்கள் சார்பில் கலைப்புலவர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பாடசாலையை ஆரம்பித்து நடத்தினார். ஆலயங்களில் மிருகபலியை நிறுத்தல் வேண்டுமென்றும். தீண்டாமையை ஒழித்தும், மதுவிலக்கை ஆதரித்தும் ஈழகேசரி, வீரகேசரி, இந்து சாதனம், இந்து ஓர்கான் ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகளும், அறிக்கைகளும் எழுதினார்.


வெளி இணைப்புக்கள்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D