ஆளுமை:நாகமுத்துப் புலவர், தனுக்கோடிபிள்ளை

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:16, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகமுத்துப் புலவர்
தந்தை தனுக்கோடிபிள்ளை
தாய் சேதுநாயகி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகமுத்துப் புலவர், தனுக்கோடிபிள்ளை. காரைநகரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை தனுக்கோடிபிள்ளை; தாய் சேதுநாயகி. இவர் சிறுவயதில் சிறிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தவர். இவர் இளமைக் கல்வியைத் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் படித்து, இலக்கியப் படிப்பை நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளையிடம் கற்றறிந்தவர்.

இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆசிரியராக 35 ஆண்டுகள் கற்பித்தமையால் நாகமுத்துச் சட்டம்பியார் என்று அழைக்கப்படுகின்றார்.

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கவிகளை இயற்றியதுடன் அவை யாவற்றையும் உள்ளடக்கி 'திருமங்கலவாழ்த்துச் சீட்டுக்கவித்திரட்டு' என்ற நூலை உருவாக்கி 1914 இல் வெளியிட்டுள்ளார். இவரால் காரைநகர் திண்ணபுர சுந்தரேசர் திருப்பதிகம், திருவூஞ்சல், எச்சரிக்கை, பராக்கு, கலிகால வேடிக்கைக்கும்மி, மலாய் நாட்டு மனோரஞ்சிதக் கும்மி என்பன பாடப்பட்டனவாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 281-282