ஆளுமை:பத்தினியம்மா, திலகநாயகம் போல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்தினியம்மா, திலகநாயகம் போல்
தந்தை சிதம்பரப்பிள்ளை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 1944.05.09
இறப்பு 2013.11.02
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்தினியம்மா திலகநாயகம் போல் (1944.05.09 - 2013.11.02) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் சிதம்பரப்பிள்ளை, தாயின் பெயர் பார்வதிப்பிள்ளை. பேராதனை பல்கலைக்கழக கலைப்பட்டதாரியான இவர் பாலபண்டிதர், சைவப்புலவர் பரீட்சைகளிலும் சித்தியெய்தியவர். நிர்வாக சேவையில் இணைந்து பலவருடம் பிரதேச செயலராக பணியாற்றி பின்னர் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

'சிதம்பர பத்தினி' என்ற புனையெரில் 1963களிலிருந்து எழுத ஆரம்பித்த இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போன்றவைகள் அமைந்தன. சுதந்திரன், ஈழநாடு, தினகரன், நங்கை முதலான பத்திரிகைகளில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறிகதைகளை எழுதியுள்ளார். இவற்றில் தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும், மன்னிப்பு , எரியகம், கல்லறை, அனர்த்தம், என்ன தவறு செய்தேன், பகுத்தறிவு போன்றவற்றை குறிப்பிடத்தக்கவை. இவரின் சிறுகதைகள் 'நிஜமும் நிழலும்' எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. சிறுவர் இலக்கியத்திலும் ஆர்வம் மிக்க இவர் நிஜத்தின் நிழல், தேன்வதை, மழலை அமுதம் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 173-175
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 54