ஆளுமை:மாஜிதா, தவ்பீக்

From நூலகம்
Name மாஜிதா
Birth
Place மருதமுனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாஜிதா, தவ்பீக் மருதமுனையைில் பிறந்த எழுத்தாளர். சிறுவயதில் இருந்து இலக்கியத்துறையில் ஆர்வம் உள்ளவர். இவருக்குக் களம் அமைத்துக் கொடுத்தது இலங்கை வானொலியின் பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளாகும். இவர் வானொலியில் வாலிபர் வட்டம், ஒலிமஞ்சரி, இலக்கியமஞ்சரி, மாதர் மஜ்லிஸ், இளைஞர் மன்றம், கவிதைச்சமர், குங்குமம் ஆகிய நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, சிந்தாமணி அகிய நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. பிறை பண்பலை , ஊவா சமூகவானொலி ஆகியவற்றில் மதமுனை ஜோதா எனும் புனைபெயரிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார்.