ஆளுமை:மாணிக்கம், மாரிமுத்து

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:43, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாணிக்கம்
தந்தை மாரிமுத்து
தாய் நாகமுத்து
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கம், மாரிமுத்து வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை மாரிமுத்து; தாய் நாகமுத்து. இவர் ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர் கல்வியைத் திருநெல்வேலி பரமேஸ்வராப் பண்டித ஆசிரியர் கலாசாலையிலும் பயின்றார்.

இவர் 1944 ஆம் ஆண்டு வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 1979 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இவர் எழுத்துலகில் ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களையும் அழகொல்லை விநாயகராலய திருப்பள்ளி எழுச்சிப் பதிகத்தையும் வேலணை முத்துமாரி அம்மன் ஊஞ்சற் பாடலையும் பெரிய புராண வசனச் சுருக்கம், கந்தபுராண வசனச் சுருக்கம், திருக்குறள் வசனச் சுருக்கம் போன்ற நூல்களையும் அளித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 266-269

வெளி இணைப்புக்கள்